பிழை திருத்தம்

செக்கச் செவேலெனும் வானம்,
எழுந்து விறைத்து நிற்கும் குன்றுகள்,
பச்சைக் கச்சையில் நூலென மரங்கள்,
சத்தமெழுப்பாமல்
கரை புரண்டோடும் ஆறு

எல்லாம் சேர்ந்தழிக்கின்றன
மழையின் ஆயிரமாயிரம்
சிறுவிரல்கள்

மழை செய்யும்
பிழை திருத்தம்
வண்ணமயமாக,
செயலிழந்து ரசிக்கிறான்
வீதிகளில் வரைந்து
வாழ்பவன்

No comments:

Post a Comment