எல்லோருக்கும் புத்தாண்டு
ஜனவரி 1ல் வருகிறது
உனக்கு மட்டும் ஏன்
பிப்ரவரி 14ல்
என்று கேட்கிறார்கள்
சொல்லிவிடவா அவர்களிடம்?
உன்னுடனான என் காதல்
பூத்த தினம்தான்
என் புத்தாண்டு என்று?
*
கல்யாண வீட்டின்
வாசலிலேயே
தயங்கி அமர்ந்துவிட்ட
என்னை
உள்ளே அழைக்கும்
அம்மாவிடம்
எப்படிச்சொல்வது?
உன்னை
நினைவுபடுத்திவிட்ட
ரோஜாக்களை
விட்டுவிட்டு
எப்படி வர
என்று...
*
என்னை வெறுப்பேற்ற
குழந்தையின் கன்னத்தில்
முத்தங்கள்
கொடுத்தாய் நீ...
ஆனால்
உனக்குத் தெரியாமல்
தன்
கன்னங்களை என்னிடம்
கொடுத்துப்போனது
குழந்தை...
*
உன்னுடனான
என் முதல் சந்திப்பில்
நான் சேர்த்து வைத்திருக்கும்
சின்னஞ்சிறு
வால் நட்சத்திரங்களை
உனக்குப் பிரத்யேகமாயப்
பரிசளிப்பேன்
ஒவ்வொரு முறையும்
எனைப்பார்க்க வருகையில்
எடுத்து வந்து
என் கனவில் நீ
விட்டுச்சென்றவை அவை.
*
விளையாடும் போது
அவ்வப்போது
திரும்பி எனைப்பாரேன்
அந்த கணப்பொழுதில்
எனைச் சுற்றியோர்
ஒளிவட்டம் தோன்றுவதாய்ப்
பிரமையேற்படுகிறது எனக்கு
என்னோட கதையும் சோகம்தான்!

வெள்ளி செவ்வாய் தவிர
மத்தநாளில் விரதம்
அதுவும்
வெள்ளை வெறுஞ்சோறு
வெஞ்சனமெல்லாம் இல்ல
அள்ளிவச்ச சோறும்
ஆடுகோழி தின்னுபோக
எஞ்சிய மிச்சம்தான்
என் வயிறும் நிறையுதில்ல
நல்லநாள் பெரியநாளில்
நாலுகுடம் தண்ணி,
வெல்லமிட்ட சோறு
வேகவச்ச கடலை...
பிள்ளைகள் பந்தடிக்கப்
பேசாத நடுவர்,
பெண்களின் சண்டையிலோ
கண்ணவிஞ்ச கடவுள்...
இன்னுமென்ன சொல்ல,
என்னுடைய பெருமையின்னு?
பிள்ளையாரா யிருப்பதற்குப்
பெருச்சாளியே தேவலாம்தான்...
சோம்பேறிகள்
தூக்கம்வர படித்த
சிந்தனையை
கனவுடன் கலைத்துவிட்டு
காலையெழுந்தேன்.
முக்கியும் முனகியும்
நடந்தும் ஓடியும்
பலனில்லை...
குனியாமலே
தெரிந்த தொந்தி
இரவினில் தின்ற
தோசைக்கு
தொட்டுக்கொண்ட
காரச்சட்னி...
காலையிலும்
கடுகடுத்த வயிறு
பாழாய்ப்போன
பல் தினமும்
கேட்கும் பற்பசை
உழைப்பறியா
உடம்புக்கு
அழுக்குகளை
களைந்தெடுக்க
ஐஸ்வர்யாராயின்
படம் சுற்றப்பட்ட
சவக்காரம்
எல்லாமுடித்து
பசியாற பார்த்திருந்த
நேரத்தில் பழைய
சோறை போட்ட
புதிய மனைவி
தயிரூற்றி உண்ட
களைப்பில்
அலுவலகத்தில் சிறிது
உறக்கம்.
இடையிலேதேனும்
சிந்தனை
எழுதவேண்டும் எனும்
நோக்கில்
வரைந்தேன் என்
வலையில்...
"உலகத்தில் எல்லோருமே
சோம்பேறிகள்..."
சிந்தனையை
கனவுடன் கலைத்துவிட்டு
காலையெழுந்தேன்.
முக்கியும் முனகியும்
நடந்தும் ஓடியும்
பலனில்லை...
குனியாமலே
தெரிந்த தொந்தி
இரவினில் தின்ற
தோசைக்கு
தொட்டுக்கொண்ட
காரச்சட்னி...
காலையிலும்
கடுகடுத்த வயிறு
பாழாய்ப்போன
பல் தினமும்
கேட்கும் பற்பசை
உழைப்பறியா
உடம்புக்கு
அழுக்குகளை
களைந்தெடுக்க
ஐஸ்வர்யாராயின்
படம் சுற்றப்பட்ட
சவக்காரம்
எல்லாமுடித்து
பசியாற பார்த்திருந்த
நேரத்தில் பழைய
சோறை போட்ட
புதிய மனைவி
தயிரூற்றி உண்ட
களைப்பில்
அலுவலகத்தில் சிறிது
உறக்கம்.
இடையிலேதேனும்
சிந்தனை
எழுதவேண்டும் எனும்
நோக்கில்
வரைந்தேன் என்
வலையில்...
"உலகத்தில் எல்லோருமே
சோம்பேறிகள்..."
அம்மா
என் தாயின் முந்தானை
இதோ இந்தப் பெட்டியில்
இதுதான் என் கோயில்
இதுவே என் தெய்வம்
குழந்தைப் பருவம்
பல முறை கக்கல்
அம்மாவின் புடவையில்
முகம் சுளிக்காமல்
துடைத்தது அந்தக் கை
இரண்டு வயது பாலகன்
மழையில் நனைந்தேன்
வந்தன தும்மல்கள்
மூக்கொழுகி நின்றேன்
கைக்கொடுத்தது
அம்மாவின் முந்தானை
அன்பாக துடைத்து
கடும் சுரம் வந்தது
இடுப்பில் அள்ளிக்கொண்டாள்
ஓடினாள் டாக்டரிடம்
நடுவில் வாந்தி எடுத்தேன்
தன் தலைப்பில் ஏந்தினாள்
முகத்தில் சுளிப்பில்லை
அதில் ஒரு சலிப்புமில்லை
கிரிக்கெட் மேட்ச்சில்
செயித்து வந்தேன்
பெருமையுடன் பார்த்தாள்
வியர்வை ஒழுக நின்றேன்
ஒத்தி எடுத்தாள்
தன் முந்தானையால்.
என் திருமணம் ஆனது
எனக்குச் செய்ததை அவள்
தன் பேரனுக்குச் செய்தாள்
முகம் சுளிக்காமல்
இன்று அவள் இல்லை
நைந்துப் போன் புடவையில்
அவளை நான் பார்க்கிறேன்
என்ன தியாகம்!
என்ன அன்பு !
கோடிக்கோடி கொடுத்தாலும்
அம்மாவை வாங்க முடியுமா?
அவள் இடத்தை நிரப்ப முடியுமா?
இதோ இந்தப் பெட்டியில்
இதுதான் என் கோயில்
இதுவே என் தெய்வம்
குழந்தைப் பருவம்
பல முறை கக்கல்
அம்மாவின் புடவையில்
முகம் சுளிக்காமல்
துடைத்தது அந்தக் கை
இரண்டு வயது பாலகன்
மழையில் நனைந்தேன்
வந்தன தும்மல்கள்
மூக்கொழுகி நின்றேன்
கைக்கொடுத்தது
அம்மாவின் முந்தானை
அன்பாக துடைத்து
கடும் சுரம் வந்தது
இடுப்பில் அள்ளிக்கொண்டாள்
ஓடினாள் டாக்டரிடம்
நடுவில் வாந்தி எடுத்தேன்
தன் தலைப்பில் ஏந்தினாள்
முகத்தில் சுளிப்பில்லை
அதில் ஒரு சலிப்புமில்லை
கிரிக்கெட் மேட்ச்சில்
செயித்து வந்தேன்
பெருமையுடன் பார்த்தாள்
வியர்வை ஒழுக நின்றேன்
ஒத்தி எடுத்தாள்
தன் முந்தானையால்.
என் திருமணம் ஆனது
எனக்குச் செய்ததை அவள்
தன் பேரனுக்குச் செய்தாள்
முகம் சுளிக்காமல்
இன்று அவள் இல்லை
நைந்துப் போன் புடவையில்
அவளை நான் பார்க்கிறேன்
என்ன தியாகம்!
என்ன அன்பு !
கோடிக்கோடி கொடுத்தாலும்
அம்மாவை வாங்க முடியுமா?
அவள் இடத்தை நிரப்ப முடியுமா?
ஐந்தாம் வகுப்பு நண்பன்.
ஆரம்பப் பள்ளியில்
என்னோடு கூடவே இருந்தான்
பட்டன் அறுந்து போன
சட்டையோடு
ஒரு நண்பன்.
ஆசிரியர் மேஜையில்
சாக்பீஸ் திருடினாலும்,
பள்ளித் தோட்டத்தில்
கொய்யா திருடினாலும்
பாதி தர தவறாதவன்.
வீட்டுப் பாடங்களை
எழுத மறந்து போன
நாட்களில் எல்லாம்,
ஆசிரியர் வரக்கூடாதெனும்
என்
பிரார்த்தனையில் தவறாமல்
அவனும் பங்கெடுப்பதுண்டு.
‘குளமாங்கா’ உடைத்துத் தின்றும்,
கடலை மிட்டாய்
கடித்துச் சிரித்தும்,
புன்னை மரத்தடியில்
புன்னக்காய் பொறுக்கிக்
கோலி விளையாடியும்,
எங்கள்
முதல் ஐந்தாண்டுக் கல்வி
கரைந்தே போயிற்று.
பிரியவே முடியாதென்றும்
உடையவே கூடாதென்றும்
நான்
கங்கணம் கட்டிக் கொண்ட
முதல் நண்பன் அவன்.
பின்,
அந்த மேய் மாத
வெயில் விடுமுறைக்குப் பின்
நான்
ஆறாம் வகுப்புக்கு சென்றபோது
அவன்
நினைவுகள் மட்டும்
அவ்வப்போது வந்து சென்றன.
அவன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும்
சில கிலோமீட்டர் தான்
தூரம்.
அப்போது.
நாங்களோ வெவ்வேறு திசையில்
வெகுதூரம்
நடந்திருந்தோம்.
கடந்து விட்டது
கால்நூற்றாண்டு
இப்போது பார்த்தால்,
‘மணி என்னாச்சு’ என்று கேட்டு
நகரக் கூடும்.
பரிச்சயமில்லாத
புது முகம் கண்டு.
என்னோடு கூடவே இருந்தான்
பட்டன் அறுந்து போன
சட்டையோடு
ஒரு நண்பன்.
ஆசிரியர் மேஜையில்
சாக்பீஸ் திருடினாலும்,
பள்ளித் தோட்டத்தில்
கொய்யா திருடினாலும்
பாதி தர தவறாதவன்.
வீட்டுப் பாடங்களை
எழுத மறந்து போன
நாட்களில் எல்லாம்,
ஆசிரியர் வரக்கூடாதெனும்
என்
பிரார்த்தனையில் தவறாமல்
அவனும் பங்கெடுப்பதுண்டு.
‘குளமாங்கா’ உடைத்துத் தின்றும்,
கடலை மிட்டாய்
கடித்துச் சிரித்தும்,
புன்னை மரத்தடியில்
புன்னக்காய் பொறுக்கிக்
கோலி விளையாடியும்,
எங்கள்
முதல் ஐந்தாண்டுக் கல்வி
கரைந்தே போயிற்று.
பிரியவே முடியாதென்றும்
உடையவே கூடாதென்றும்
நான்
கங்கணம் கட்டிக் கொண்ட
முதல் நண்பன் அவன்.
பின்,
அந்த மேய் மாத
வெயில் விடுமுறைக்குப் பின்
நான்
ஆறாம் வகுப்புக்கு சென்றபோது
அவன்
நினைவுகள் மட்டும்
அவ்வப்போது வந்து சென்றன.
அவன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும்
சில கிலோமீட்டர் தான்
தூரம்.
அப்போது.
நாங்களோ வெவ்வேறு திசையில்
வெகுதூரம்
நடந்திருந்தோம்.
கடந்து விட்டது
கால்நூற்றாண்டு
இப்போது பார்த்தால்,
‘மணி என்னாச்சு’ என்று கேட்டு
நகரக் கூடும்.
பரிச்சயமில்லாத
புது முகம் கண்டு.
மாறாதவைகள்
எடைகள் எப்போதும்
நியாயமாய் இருந்ததில்லை
எனினும்
‘நியாய விலைக் கடை’கள்
பெயர் மாற்றிக் கொள்ளவில்லை.
பாதி அளவுக்கே இருக்கிறது
நீதி,
ஆனாலும் நீதிபதிகள்
நீதிபாதிகள்
என அழைக்கப்படவில்லை.
ஜனங்களை விட அதிகமாய்
இருக்கைகளைப் பற்றியே
இருக்கின்றன அரசுகள்,
ஆனாலும்
சாசனங்கள் பெயர்மாறி
ஆசனங்கள் ஆகவில்லை.
பிடுங்கல்களைக் கூட
‘தட்சணை’கள் என்றே
வரன் வீட்டுச்
சவரன்கள் வாயாரச் சொல்கின்றன.
என்ன சொல்வது ?
மரணத்தைக் கூட
மறுவீட்டுப் பிரவேசம் என்று
அன்போடழைத்தே
பழக்கப் பட்டவர்கள் நாம்.
பெயர்களில் என்ன இருக்கிறது
வேர்களில்
வித்யாசம் இல்லா ஊர்களில் ?
நியாயமாய் இருந்ததில்லை
எனினும்
‘நியாய விலைக் கடை’கள்
பெயர் மாற்றிக் கொள்ளவில்லை.
பாதி அளவுக்கே இருக்கிறது
நீதி,
ஆனாலும் நீதிபதிகள்
நீதிபாதிகள்
என அழைக்கப்படவில்லை.
ஜனங்களை விட அதிகமாய்
இருக்கைகளைப் பற்றியே
இருக்கின்றன அரசுகள்,
ஆனாலும்
சாசனங்கள் பெயர்மாறி
ஆசனங்கள் ஆகவில்லை.
பிடுங்கல்களைக் கூட
‘தட்சணை’கள் என்றே
வரன் வீட்டுச்
சவரன்கள் வாயாரச் சொல்கின்றன.
என்ன சொல்வது ?
மரணத்தைக் கூட
மறுவீட்டுப் பிரவேசம் என்று
அன்போடழைத்தே
பழக்கப் பட்டவர்கள் நாம்.
பெயர்களில் என்ன இருக்கிறது
வேர்களில்
வித்யாசம் இல்லா ஊர்களில் ?
ஒரே ஒரு நொடியில்..!
அருவமாய் இருந்த எனக்கு
கருவில் உருவம்
கொடுத்தாளென் தாய்…
அதற்குப் பத்து மாதங்கள் ஆனது..!
கிள்ளையாய் இருந்த என்னை
நல்ல பெண் பிள்ளையாய்
மாற்றினார் என் தந்தை…
அதற்குச் சில ஆண்டுகள் ஆனது..!
களி மண்ணாய் இருந்த என்னை
சிறந்த கல்விமானாக
மாற்றினாள் என் ஆசிரியை…
அதற்குப் பல ஆண்டுகள் ஆனது..!
என்ன மாயம் செய்தாயடா..?
ஒரே ஒரு நொடியில்
நான் உந்தன் காதலியாகி விட்டேன்..!
கருவில் உருவம்
கொடுத்தாளென் தாய்…
அதற்குப் பத்து மாதங்கள் ஆனது..!
கிள்ளையாய் இருந்த என்னை
நல்ல பெண் பிள்ளையாய்
மாற்றினார் என் தந்தை…
அதற்குச் சில ஆண்டுகள் ஆனது..!
களி மண்ணாய் இருந்த என்னை
சிறந்த கல்விமானாக
மாற்றினாள் என் ஆசிரியை…
அதற்குப் பல ஆண்டுகள் ஆனது..!
என்ன மாயம் செய்தாயடா..?
ஒரே ஒரு நொடியில்
நான் உந்தன் காதலியாகி விட்டேன்..!
பூஜைக்கு வந்த மலர்
வயதுக்கு
வந்தபோது
வாராத ஆசையுன்
வட்டமிடும் கண்பார்த்து
வந்து விட்டதே
வெள்ளித்திரையில்விரியும்
விளங்காத காட்சிகள்உன்
கண் பார்த்து
மண்பார்த்தபோது
புரிந்து போனதே
மீசை பற்றிகேட்டாள்தோழி
ஆசைகொண்ட நேரத்தில்
பசை போட்டு ஒட்டவில்லை
உன்முகமென்றால்
வசைபாடுவாளே
கடவுள் கூட
பிடித்துபோனது
உன்பெயரை அவருக்கு
வைத்திருப்பதால்
கனவு தந்து
கவிதை தந்து
காதல் தந்தது
உறவு தந்து
உயிரும் தந்து
உடலில் கலந்தது
இரவு கொன்று
இனிமை தின்று
இதயம் தீர்ந்தது
கண்மை கலைத்து
பெண்மை எழுந்து
மென்மையானது
தன்மை மறந்து
தவிக்கும் நெஞ்சம்
தனலாய் ஆனது
மலர்ந்த மலரிது
மடியும் முன்னே
மழையாய் வந்திடு
கலந்த இதயம்
கலங்கு முன்னே
கண்ணே வந்திடு
எனக்குள் இருந்து
எழும்பும் எழுத்திற்கும்
ஏக்கம் இருந்திடும்
தாக்கம் கண்டு
காக்க நீயுமெனை
நோக்கி வந்திடு
நேரம் கடந்தென்
நிலையை மறந்துன்
நினைவால் ஏங்குகின்றேன்
காலம் கடந்து
கனவில் நடந்தோர்
கனவைத் தேடுகின்றேன்
உலகம் மறந்து
உள்ளம் கலந்த
உள்ளத்தைத் தேடுகின்றேன்
விழிக்குள்ளே
விழித்திருக்கும் என்
உயிரைத் தேடுகின்றேன்
ஓர் இதயத்துள்ளே
ஒளிந்து கொண்டஎன்
இதயத்தைத் தேடுகின்றேன்
காயும் நிலவென
பாயும் ஒளியென
தாயென வருவாயே
உலகம் மறந்து
உலவும் உடலை
உனக்கா தருவது
அக்னியின் முன்னே
அழிக்கப்பட்ட என் ஆசையை
அழித்தா விடுவது
பிற மஞ்சம் ஏறினாலும்
நெஞ்சம் மாறாததை
வஞ்சம் என்பாயா
அர்ச்சிக்கப்பட்ட
மலரென்றாலும்
அட்சதையாய் விழுவதை
அள்ளிக் கொள்வாயா
எச்சில் பட்டாலும்
ஏற்றுக் கொள்வாயா
அணில் கடித்ததென
பூஜிக்கப்பட்ட
மலரென்றாலும்
பிரசாதமென ஏற்றுக் கொள்வாயா?
வந்தபோது
வாராத ஆசையுன்
வட்டமிடும் கண்பார்த்து
வந்து விட்டதே
வெள்ளித்திரையில்விரியும்
விளங்காத காட்சிகள்உன்
கண் பார்த்து
மண்பார்த்தபோது
புரிந்து போனதே
மீசை பற்றிகேட்டாள்தோழி
ஆசைகொண்ட நேரத்தில்
பசை போட்டு ஒட்டவில்லை
உன்முகமென்றால்
வசைபாடுவாளே
கடவுள் கூட
பிடித்துபோனது
உன்பெயரை அவருக்கு
வைத்திருப்பதால்
கனவு தந்து
கவிதை தந்து
காதல் தந்தது
உறவு தந்து
உயிரும் தந்து
உடலில் கலந்தது
இரவு கொன்று
இனிமை தின்று
இதயம் தீர்ந்தது
கண்மை கலைத்து
பெண்மை எழுந்து
மென்மையானது
தன்மை மறந்து
தவிக்கும் நெஞ்சம்
தனலாய் ஆனது
மலர்ந்த மலரிது
மடியும் முன்னே
மழையாய் வந்திடு
கலந்த இதயம்
கலங்கு முன்னே
கண்ணே வந்திடு
எனக்குள் இருந்து
எழும்பும் எழுத்திற்கும்
ஏக்கம் இருந்திடும்
தாக்கம் கண்டு
காக்க நீயுமெனை
நோக்கி வந்திடு
நேரம் கடந்தென்
நிலையை மறந்துன்
நினைவால் ஏங்குகின்றேன்
காலம் கடந்து
கனவில் நடந்தோர்
கனவைத் தேடுகின்றேன்
உலகம் மறந்து
உள்ளம் கலந்த
உள்ளத்தைத் தேடுகின்றேன்
விழிக்குள்ளே
விழித்திருக்கும் என்
உயிரைத் தேடுகின்றேன்
ஓர் இதயத்துள்ளே
ஒளிந்து கொண்டஎன்
இதயத்தைத் தேடுகின்றேன்
காயும் நிலவென
பாயும் ஒளியென
தாயென வருவாயே
உலகம் மறந்து
உலவும் உடலை
உனக்கா தருவது
அக்னியின் முன்னே
அழிக்கப்பட்ட என் ஆசையை
அழித்தா விடுவது
பிற மஞ்சம் ஏறினாலும்
நெஞ்சம் மாறாததை
வஞ்சம் என்பாயா
அர்ச்சிக்கப்பட்ட
மலரென்றாலும்
அட்சதையாய் விழுவதை
அள்ளிக் கொள்வாயா
எச்சில் பட்டாலும்
ஏற்றுக் கொள்வாயா
அணில் கடித்ததென
பூஜிக்கப்பட்ட
மலரென்றாலும்
பிரசாதமென ஏற்றுக் கொள்வாயா?
நாம் மனிதாபிமானிகள்
காதலைப்பிழிந்து பிழிந்து
கவிதை வடிப்போம்..!
மென்மனசுக்காரர் நாமெனப்
பீற்றித் திரிவோம்..!
எம்மைக் கடிக்கும்
எறும்பையும்
தடவிக்கொடுக்கும்
வள்ளலார் ஆவோம்!
மிருகவதைக்கு எதிரானவர்
என்று கோஷமிடுவோம்..!
ஏட்டில் எல்லாமே
எழுதி வைப்போம்!
சொல்லில்
வாள் வீச்சு நடத்துவதே
நம் செயலாக்கி மகிழ்வோம்!
துடித்து அழும் என் இனம்..
உயிர் வதையில் வலி கொள்ளும்..
என் உதரம்..
முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள
எம் உறவுகள்..
ம்ஹீம்..
அவர் விழிநீர்
துடைக்க கூட
விரல் கொடுக்கமாடோம்..
ஏனெனில்
நாம் மனிதாபிமானிகள்..!
கவிதை வடிப்போம்..!
மென்மனசுக்காரர் நாமெனப்
பீற்றித் திரிவோம்..!
எம்மைக் கடிக்கும்
எறும்பையும்
தடவிக்கொடுக்கும்
வள்ளலார் ஆவோம்!
மிருகவதைக்கு எதிரானவர்
என்று கோஷமிடுவோம்..!
ஏட்டில் எல்லாமே
எழுதி வைப்போம்!
சொல்லில்
வாள் வீச்சு நடத்துவதே
நம் செயலாக்கி மகிழ்வோம்!
துடித்து அழும் என் இனம்..
உயிர் வதையில் வலி கொள்ளும்..
என் உதரம்..
முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள
எம் உறவுகள்..
ம்ஹீம்..
அவர் விழிநீர்
துடைக்க கூட
விரல் கொடுக்கமாடோம்..
ஏனெனில்
நாம் மனிதாபிமானிகள்..!
பிழை திருத்தம்
செக்கச் செவேலெனும் வானம்,
எழுந்து விறைத்து நிற்கும் குன்றுகள்,
பச்சைக் கச்சையில் நூலென மரங்கள்,
சத்தமெழுப்பாமல்
கரை புரண்டோடும் ஆறு
எல்லாம் சேர்ந்தழிக்கின்றன
மழையின் ஆயிரமாயிரம்
சிறுவிரல்கள்
மழை செய்யும்
பிழை திருத்தம்
வண்ணமயமாக,
செயலிழந்து ரசிக்கிறான்
வீதிகளில் வரைந்து
வாழ்பவன்
எழுந்து விறைத்து நிற்கும் குன்றுகள்,
பச்சைக் கச்சையில் நூலென மரங்கள்,
சத்தமெழுப்பாமல்
கரை புரண்டோடும் ஆறு
எல்லாம் சேர்ந்தழிக்கின்றன
மழையின் ஆயிரமாயிரம்
சிறுவிரல்கள்
மழை செய்யும்
பிழை திருத்தம்
வண்ணமயமாக,
செயலிழந்து ரசிக்கிறான்
வீதிகளில் வரைந்து
வாழ்பவன்
ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி?
ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி?
(குறிப்பு: பின்வரும் ஐடியாக்களை நீங்கள் தவறாக பின்பற்றி உதை வாங்கினால் கம்பெனி பொறுபல்ல. ஐடியாக்கள் சிரிக்க ரசிக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும்)
இப்போ இருக்குற recession டைம்ல இந்த பதிவு நம் அனைவருக்கும் உதவும் என்று நினைக்கிறேன். சில பேர் இத ஏற்கனவே பண்ணி கொண்டிருக்கலாம். இல்லாதவர்கள், இதை படிச்சு முயற்சி செய்ஞ்சு பாருங்க.
******************
முன்னுரை:
----------------
# "வருஷம் முழுவதும் உங்களுக்கு ட்ரீட் வேணும்னா நீங்கள் உங்கள் நண்பரை சரியாக தேர்ந்து எடுக்க வேண்டும்" என்கிறார் கில்மானந்தா.
விளக்கம்:
-------------
அதாவது தினமும் உங்கள் நண்பர்களில் ஒருவரது பிறந்தநாள் வருமாறு நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இப்படி தேர்ந்து எடுத்தால் வருஷம் 365 நாளும் நமக்கு ட்ரீட் தான்.
**************
முதல்ல காலையில் இருந்து ஆரம்பிப்போம்:
@ பொதுவா நாம் பேப்பர் வாங்க குறைந்தது இரண்டு ரூபாய் செலவழிக்க வேண்டும், ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு எவளோ வருது, அதை போய் காசு குடுத்து படிச்சிட்டு.....
டி கடைக்கு போறதெல்லாம் ஓல்ட் பேஷன் அங்க போனாலும், நீங்க நாலு ரூபாய்க்கு டி குடிக்கணும்.
ஐடியா நெ.1:
----------------
உங்க பக்கத்துக்கு வீட்ல எத்தனை மணிக்கு பேப்பர் போட பையன் வரான்னு நோட் பண்ணுங்க. உதாரணத்துக்கு இப்போ பையன் ஆறு மணிக்கு பேப்பர் போடுறன்னு வைங்க, உங்க பக்கத்துக்கு வீட்டுகாரர் எப்படியும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் பேப்பர் எடுக்க வருவார். இந்த அரை மணி நேரத்துக்குள்ள நீங்க போய் அங்கேயே எங்கையாவது ஓரமா உக்காந்து பேப்பர் படிச்சு முடிச்சிடலாம். கொஞ்சம் கேவலமா தான் இருக்கும் வேற வழி இல்லை.
ஐடியா நெ.2:
----------------
# அப்புறம் ஓசியில் காபி குடிப்பதற்கு நீங்கள் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வாக்கிங் போற வழியில் கண்டிப்பாக உங்களக்கு தெரிந்தவர்கள் வீடு இருக்குமாறு பார்த்து வைத்து கொள்ள வேண்டும். அவ்வழியே நீங்கள் வாக்கிங் போகும் போது,அவர்கள் வீட்டில் காபி வாசம் மூக்கை தூளைக்கும். அப்போது நீங்கள் பாட்டுக்கு நடு வீட்டில் போய் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பா உங்களக்கும் ஒரு கப் காபி உண்டு.
(குறிப்பு: ஒரு நாளைக்கு ஒரு வீட்டை தேர்ந்து எடுக்கவும்).
******************
@ உங்க நண்பன் லவ் பண்ண ஆரம்பிச்சா உங்களுக்கு கொண்டாட்டம் தான்.
ஐடியா நெ.3:
---------------
# மச்சான் உன் ஆளு இன்னிக்கு inoxல படத்துக்கு போறதா தகவல்
வந்துருக்கு அப்படின்னு பிட்டு போட்டு நீங்க போக விரும்புற படத்துக்கு நண்பனின் தூட்டுலியே போய் குளிர் காயலாம்.
# "மச்சான் உன் ஆளுக்கு இன்னிக்கு பிறந்த நாள் எங்கடா ட்ரீட்?" என்று ஒரு நாள் செலவை உங்கள் நண்பரை தலையில் கட்டலாம்.
# நண்பனின் காதலி அவனை பார்க்கும் போதோ இல்லை பார்த்து சிரிக்கும் போதோ, நீங்கள் உங்கள் நண்பனை உசுபேத்தி உசுபேத்தி நல்ல நல்ல ஹோட்டல்லா போய் சாப்பிட்டு நண்பனின் தூட்டில் மொய் எழுதுலாம்.
எச்சரிக்கை நெ.1:
--------------------
ஆனா ஒரு முக்கியமான விஷயம் இங்கதான் நீங்க அலெர்ட்ஆ இருக்கணும். அந்த லவ் ஒன் சைடு லவ்வாக இருக்கும்வரைதான் நீங்க வாங்கி சாப்பிட முடியும். அதை மனசுல வச்சுக்குங்க. நண்பனின் லவ் சக்சஸ் ஆச்சுன்னா அவ்வளோதான் உங்களை கண்டுக்க மாட்டான்.
*********************
@ சரி அடுத்த கட்டத்துக்கு வருவோம், சாப்பாடு வேணும்னா
கூச்ச படாம எதாவது ஒரு கல்யாண மண்டபத்தில் பூந்து விடுங்கள்.
ஐடியா நெ.4:
---------------
கொஞ்ச நேரம் சீட்ல உக்காந்து அப்படியே லைட்ஆ பராக்கு பாருங்க,
எதுக்குன்னா சாப்பாடு பந்தி ஆரம்பிச்சிடாங்களான்னு ஒரு பார்வை
பாத்து வச்சுக்குங்க. எப்படியும் சில பேர் முதல் பந்தியில முந்துவாங்க அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கணும், இல்லன அவளோ தான் ,முதல் பந்தி முடியுற வரைக்கும் யார் பின்னாடியாவது நின்னு சீட் புடிக்கணும்.
எச்சரிக்கை நெ.2:
---------------------
பந்தியில உக்காந்த பிறகு நீங்க அரக்க பறக்க உள்ள தள்ளாதிங்க.
பொறுமையா சாப்டனும், யாராவது எதாவது வேணுமானு கேட்டாங்கனா, நாசுக்கா மறுத்துடுங்க இல்லை நீங்க எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு கேட்டிங்க உங்கள நோட் பண்ணி வச்சிருவாங்க, அது ரிஸ்க்.
எச்சரிக்கை நெ.3:
---------------------
சாப்பிட்டு முடிச்ச உடனே கையை கழிவிட்டு வீடு வந்து சேருங்க அதை விட்டுட்டு ஐஸ் சாப்பிடுறேன், பீடா போடுறேன்னு நீங்க சம்பவ இடத்துல இருந்திங்கனா, அப்புறம் அங்க உங்களுக்கு விழுற அடி உங்கள் வாழ்நாளில் நீங்க மறக்க முடியாத சம்பவம் ஆயிடும்.
(பி.கு: சாப்பிடுவதுக்கு மட்டும் தான் இந்த யுக்தியை நீங்கள் கையாள
வேண்டும், மற்றபடி செருப்பு திருடுவதற்கு நீங்கள் முயற்சி செய்து
மாட்டி கொண்டிர்கள் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)
***********
பஞ்ச்:
# நம்ம இங்கிலீஷ்காரன் ட்ரீட்ன்னு ஒரு வார்த்தை கண்டுபிடிச்சது தான் அவன் செஞ்ச ஒரே நல்ல விஷயம். இதை நம்ம ஆளுங்க
கரெக்ட்ஆ பாலோ பண்ண ஆரம்பிச்சிடாங்க. "மச்சான் என்னிக்கு ட்ரீட்?" இந்த ஒரு வார்த்தையை வெச்சு சில காலம் ஓட்டலாம். ஆனா நம்மகிட்டயே ட்ரீட் கேட்டாங்கனா அப்பத்தான் நாம நட்பை கட் பண்ண வேண்டிய நேரம். இல்லன நாம ஒரு பெரிய அமௌன்ட் செலவு செய்ய நேரிடும்.
(குறிப்பு: பின்வரும் ஐடியாக்களை நீங்கள் தவறாக பின்பற்றி உதை வாங்கினால் கம்பெனி பொறுபல்ல. ஐடியாக்கள் சிரிக்க ரசிக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும்)
இப்போ இருக்குற recession டைம்ல இந்த பதிவு நம் அனைவருக்கும் உதவும் என்று நினைக்கிறேன். சில பேர் இத ஏற்கனவே பண்ணி கொண்டிருக்கலாம். இல்லாதவர்கள், இதை படிச்சு முயற்சி செய்ஞ்சு பாருங்க.
******************
முன்னுரை:
----------------
# "வருஷம் முழுவதும் உங்களுக்கு ட்ரீட் வேணும்னா நீங்கள் உங்கள் நண்பரை சரியாக தேர்ந்து எடுக்க வேண்டும்" என்கிறார் கில்மானந்தா.
விளக்கம்:
-------------
அதாவது தினமும் உங்கள் நண்பர்களில் ஒருவரது பிறந்தநாள் வருமாறு நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இப்படி தேர்ந்து எடுத்தால் வருஷம் 365 நாளும் நமக்கு ட்ரீட் தான்.
**************
முதல்ல காலையில் இருந்து ஆரம்பிப்போம்:
@ பொதுவா நாம் பேப்பர் வாங்க குறைந்தது இரண்டு ரூபாய் செலவழிக்க வேண்டும், ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு எவளோ வருது, அதை போய் காசு குடுத்து படிச்சிட்டு.....
டி கடைக்கு போறதெல்லாம் ஓல்ட் பேஷன் அங்க போனாலும், நீங்க நாலு ரூபாய்க்கு டி குடிக்கணும்.
ஐடியா நெ.1:
----------------
உங்க பக்கத்துக்கு வீட்ல எத்தனை மணிக்கு பேப்பர் போட பையன் வரான்னு நோட் பண்ணுங்க. உதாரணத்துக்கு இப்போ பையன் ஆறு மணிக்கு பேப்பர் போடுறன்னு வைங்க, உங்க பக்கத்துக்கு வீட்டுகாரர் எப்படியும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் பேப்பர் எடுக்க வருவார். இந்த அரை மணி நேரத்துக்குள்ள நீங்க போய் அங்கேயே எங்கையாவது ஓரமா உக்காந்து பேப்பர் படிச்சு முடிச்சிடலாம். கொஞ்சம் கேவலமா தான் இருக்கும் வேற வழி இல்லை.
ஐடியா நெ.2:
----------------
# அப்புறம் ஓசியில் காபி குடிப்பதற்கு நீங்கள் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வாக்கிங் போற வழியில் கண்டிப்பாக உங்களக்கு தெரிந்தவர்கள் வீடு இருக்குமாறு பார்த்து வைத்து கொள்ள வேண்டும். அவ்வழியே நீங்கள் வாக்கிங் போகும் போது,அவர்கள் வீட்டில் காபி வாசம் மூக்கை தூளைக்கும். அப்போது நீங்கள் பாட்டுக்கு நடு வீட்டில் போய் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பா உங்களக்கும் ஒரு கப் காபி உண்டு.
(குறிப்பு: ஒரு நாளைக்கு ஒரு வீட்டை தேர்ந்து எடுக்கவும்).
******************
@ உங்க நண்பன் லவ் பண்ண ஆரம்பிச்சா உங்களுக்கு கொண்டாட்டம் தான்.
ஐடியா நெ.3:
---------------
# மச்சான் உன் ஆளு இன்னிக்கு inoxல படத்துக்கு போறதா தகவல்
வந்துருக்கு அப்படின்னு பிட்டு போட்டு நீங்க போக விரும்புற படத்துக்கு நண்பனின் தூட்டுலியே போய் குளிர் காயலாம்.
# "மச்சான் உன் ஆளுக்கு இன்னிக்கு பிறந்த நாள் எங்கடா ட்ரீட்?" என்று ஒரு நாள் செலவை உங்கள் நண்பரை தலையில் கட்டலாம்.
# நண்பனின் காதலி அவனை பார்க்கும் போதோ இல்லை பார்த்து சிரிக்கும் போதோ, நீங்கள் உங்கள் நண்பனை உசுபேத்தி உசுபேத்தி நல்ல நல்ல ஹோட்டல்லா போய் சாப்பிட்டு நண்பனின் தூட்டில் மொய் எழுதுலாம்.
எச்சரிக்கை நெ.1:
--------------------
ஆனா ஒரு முக்கியமான விஷயம் இங்கதான் நீங்க அலெர்ட்ஆ இருக்கணும். அந்த லவ் ஒன் சைடு லவ்வாக இருக்கும்வரைதான் நீங்க வாங்கி சாப்பிட முடியும். அதை மனசுல வச்சுக்குங்க. நண்பனின் லவ் சக்சஸ் ஆச்சுன்னா அவ்வளோதான் உங்களை கண்டுக்க மாட்டான்.
*********************
@ சரி அடுத்த கட்டத்துக்கு வருவோம், சாப்பாடு வேணும்னா
கூச்ச படாம எதாவது ஒரு கல்யாண மண்டபத்தில் பூந்து விடுங்கள்.
ஐடியா நெ.4:
---------------
கொஞ்ச நேரம் சீட்ல உக்காந்து அப்படியே லைட்ஆ பராக்கு பாருங்க,
எதுக்குன்னா சாப்பாடு பந்தி ஆரம்பிச்சிடாங்களான்னு ஒரு பார்வை
பாத்து வச்சுக்குங்க. எப்படியும் சில பேர் முதல் பந்தியில முந்துவாங்க அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கணும், இல்லன அவளோ தான் ,முதல் பந்தி முடியுற வரைக்கும் யார் பின்னாடியாவது நின்னு சீட் புடிக்கணும்.
எச்சரிக்கை நெ.2:
---------------------
பந்தியில உக்காந்த பிறகு நீங்க அரக்க பறக்க உள்ள தள்ளாதிங்க.
பொறுமையா சாப்டனும், யாராவது எதாவது வேணுமானு கேட்டாங்கனா, நாசுக்கா மறுத்துடுங்க இல்லை நீங்க எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு கேட்டிங்க உங்கள நோட் பண்ணி வச்சிருவாங்க, அது ரிஸ்க்.
எச்சரிக்கை நெ.3:
---------------------
சாப்பிட்டு முடிச்ச உடனே கையை கழிவிட்டு வீடு வந்து சேருங்க அதை விட்டுட்டு ஐஸ் சாப்பிடுறேன், பீடா போடுறேன்னு நீங்க சம்பவ இடத்துல இருந்திங்கனா, அப்புறம் அங்க உங்களுக்கு விழுற அடி உங்கள் வாழ்நாளில் நீங்க மறக்க முடியாத சம்பவம் ஆயிடும்.
(பி.கு: சாப்பிடுவதுக்கு மட்டும் தான் இந்த யுக்தியை நீங்கள் கையாள
வேண்டும், மற்றபடி செருப்பு திருடுவதற்கு நீங்கள் முயற்சி செய்து
மாட்டி கொண்டிர்கள் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)
***********
பஞ்ச்:
# நம்ம இங்கிலீஷ்காரன் ட்ரீட்ன்னு ஒரு வார்த்தை கண்டுபிடிச்சது தான் அவன் செஞ்ச ஒரே நல்ல விஷயம். இதை நம்ம ஆளுங்க
கரெக்ட்ஆ பாலோ பண்ண ஆரம்பிச்சிடாங்க. "மச்சான் என்னிக்கு ட்ரீட்?" இந்த ஒரு வார்த்தையை வெச்சு சில காலம் ஓட்டலாம். ஆனா நம்மகிட்டயே ட்ரீட் கேட்டாங்கனா அப்பத்தான் நாம நட்பை கட் பண்ண வேண்டிய நேரம். இல்லன நாம ஒரு பெரிய அமௌன்ட் செலவு செய்ய நேரிடும்.
அம்மா கவிதைகள்
பனிக்காலம்
உள்சட்டை,
கம்பளிச் சட்டை,
காலுறை,
போர்த்திக் கொள்ள
போர்வை என
அனைத்துக்கும்
மேலாய்
உன்
அரவணைப்பு.
சமாளித்துக் கொள்வேன்
இந்த
பனிக் காலத்தை
எளிமையாய்.
முப்படை நீ
ஆபத்துக்களை
அறியத்தெரியாத
என்னை
முப்படையாய்
இருந்து
காப்பவள்
நீ.
உன்னை
காக்கும்
நாட்களை
எண்ணி
காத்துக்
கொண்டிருக்கிறேன்
நான்.
காத்திருக்கிறேன்
என்
சிறுவயது
நினைவுகளை
புகைப்படமாக்கினாய்.
என்
முதல் அழுகையை
பதிவு
செய்தாய்.
நான்
வளர்ந்ததும்
பார்க்க.
உன்னை காக்கும்
நேரத்தை
எதிர்பார்த்து
காத்திருக்கிறேன்
நான்.
பயம்
பயமாய்
இருக்கிறது.
மனிதர்களை
மதிக்கத்
தெரியாத பலர்
வாழ்கின்ற
இந்த
உலகத்தில்
ஏன்
என்னை
இணைத்து விட்டாய்.
உன்
உடலை
கூறுபோட்டு
வெளிவந்தேன் நான் .
பிரசவ
மயக்கம் தெளிந்து
என்
முகத்தை பார்த்து
பூரிப்படைந்தாய்
நீ வலிகளை மறந்து.
வலிகளை
உண்டாக்கிய என்னால் மட்டும்
ஆறுதல்
சொல்ல முடியவில்லை உனக்கு.
என்னால்
முடிந்தது ஒன்றுதான்
என்
முதல் அழுகை
உனக்கே சமர்ப்பணம்.
உள்சட்டை,
கம்பளிச் சட்டை,
காலுறை,
போர்த்திக் கொள்ள
போர்வை என
அனைத்துக்கும்
மேலாய்
உன்
அரவணைப்பு.
சமாளித்துக் கொள்வேன்
இந்த
பனிக் காலத்தை
எளிமையாய்.
முப்படை நீ
ஆபத்துக்களை
அறியத்தெரியாத
என்னை
முப்படையாய்
இருந்து
காப்பவள்
நீ.
உன்னை
காக்கும்
நாட்களை
எண்ணி
காத்துக்
கொண்டிருக்கிறேன்
நான்.
காத்திருக்கிறேன்
என்
சிறுவயது
நினைவுகளை
புகைப்படமாக்கினாய்.
என்
முதல் அழுகையை
பதிவு
செய்தாய்.
நான்
வளர்ந்ததும்
பார்க்க.
உன்னை காக்கும்
நேரத்தை
எதிர்பார்த்து
காத்திருக்கிறேன்
நான்.
பயம்
பயமாய்
இருக்கிறது.
மனிதர்களை
மதிக்கத்
தெரியாத பலர்
வாழ்கின்ற
இந்த
உலகத்தில்
ஏன்
என்னை
இணைத்து விட்டாய்.
உன்
உடலை
கூறுபோட்டு
வெளிவந்தேன் நான் .
பிரசவ
மயக்கம் தெளிந்து
என்
முகத்தை பார்த்து
பூரிப்படைந்தாய்
நீ வலிகளை மறந்து.
வலிகளை
உண்டாக்கிய என்னால் மட்டும்
ஆறுதல்
சொல்ல முடியவில்லை உனக்கு.
என்னால்
முடிந்தது ஒன்றுதான்
என்
முதல் அழுகை
உனக்கே சமர்ப்பணம்.
எனக்கும், உனக்கும்….
வெற்றிகள் உனக்கு
சிற்பங்கள் பரிசளிக்கலாம்
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்து கொள்.
ஃ
மழை
நதி
விதை
விழுவதால் எழுபவை இவை.
நீ மட்டும் ஏன்
விழுந்த இடத்தில்
உனக்கு நீயே
கல்லறை கட்டுகிறாய்.
ஃ
உன் சுவடுகள்
சிறை பிடிக்கப்படலாம்
உன் பாதைகள்
திருடப்படலாம்
பயப்படாதே
பாதங்களைப் பாதுகாத்துக் கொள்.
ஃ
நீ
வெற்றி பெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்
தோல்வி தான் அடைந்திருப்பாய்
நீ
தோற்றுப் போனதாய் நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றி தான் பெற்றிருப்பாய்
உணர்ந்து கொள்
நீ
தோல்வியடைந்தது வாழ்க்கையிலல்ல
புரிதலில்.
ஃ
உன் வழிகளெங்கும்
தூண்டில்கள் விழித்திருக்கலாம்
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம்
தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள்
தங்கமீனாய்
தான் இருப்பேனென
தர்க்கம் செய்யாதே !
ஃ
காட்டாறு கரை புரண்டு வருகிறதா
நாணலாய் மாறு
புயல்க்காற்று புறப்படுகிறதா
புல்லாய் மாறு
தொட்டாச் சிணுங்கியாய் இருப்பதும்
பச்சோந்தியாய் மாறுவதும்
தப்பில்லை
மனித நேயத்தை
நீ
மறுதலிக்காத வரை !
சிற்பங்கள் பரிசளிக்கலாம்
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்து கொள்.
ஃ
மழை
நதி
விதை
விழுவதால் எழுபவை இவை.
நீ மட்டும் ஏன்
விழுந்த இடத்தில்
உனக்கு நீயே
கல்லறை கட்டுகிறாய்.
ஃ
உன் சுவடுகள்
சிறை பிடிக்கப்படலாம்
உன் பாதைகள்
திருடப்படலாம்
பயப்படாதே
பாதங்களைப் பாதுகாத்துக் கொள்.
ஃ
நீ
வெற்றி பெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்
தோல்வி தான் அடைந்திருப்பாய்
நீ
தோற்றுப் போனதாய் நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றி தான் பெற்றிருப்பாய்
உணர்ந்து கொள்
நீ
தோல்வியடைந்தது வாழ்க்கையிலல்ல
புரிதலில்.
ஃ
உன் வழிகளெங்கும்
தூண்டில்கள் விழித்திருக்கலாம்
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம்
தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள்
தங்கமீனாய்
தான் இருப்பேனென
தர்க்கம் செய்யாதே !
ஃ
காட்டாறு கரை புரண்டு வருகிறதா
நாணலாய் மாறு
புயல்க்காற்று புறப்படுகிறதா
புல்லாய் மாறு
தொட்டாச் சிணுங்கியாய் இருப்பதும்
பச்சோந்தியாய் மாறுவதும்
தப்பில்லை
மனித நேயத்தை
நீ
மறுதலிக்காத வரை !
இதுவும் பழசு
நான்
இப்போது எழுத நினைத்த
கவிதையை
யாரேனும்
எழுத நினைத்திருக்கலாம்.
நான்
நேற்று எழுதிய கவிதையை
யாரேனும்
என்றோ எழுதியிருக்கலாம்.
யாரும் எழுதவில்லை என
நான்
வார்த்தைகளால்
கோத்து வைத்த கவிதையை,
என்றேனும்
ஓர் செல்லரித்த ஓலைச் சுவடி
சுமந்து கனத்திருக்கலாம்.
வெளிக்காட்டாத
டைரிகள் ஏதேனும்
அவற்றை
ஒலிபரப்பு செய்யாமல்
ஒளித்து வைத்திருக்கலாம்.
இல்லையேல்,
மனசுக்குள் மட்டுமாவது
யாரேனும்
முனகிப் பார்த்திருக்கலாம்.
எனக்கே எனக்கான
என்
அனுபவக் கவிதைகள் கூட,
ஏதேனும்
கிராமத்துத் திண்ணைகள்
அனுபவித்து உரையாடியிருக்கலாம்.
எதுவும்
புதிதென்று என்னிடம்
எதுவுமே இல்லை.
எல்லாமே
நேற்றின் நீட்சிகள்,
இல்லையேல்
துண்டிக்கப்பட்ட
கடந்தகாலக் காற்றின்
இணைப்புகள் மட்டுமே.
இப்போது எழுத நினைத்த
கவிதையை
யாரேனும்
எழுத நினைத்திருக்கலாம்.
நான்
நேற்று எழுதிய கவிதையை
யாரேனும்
என்றோ எழுதியிருக்கலாம்.
யாரும் எழுதவில்லை என
நான்
வார்த்தைகளால்
கோத்து வைத்த கவிதையை,
என்றேனும்
ஓர் செல்லரித்த ஓலைச் சுவடி
சுமந்து கனத்திருக்கலாம்.
வெளிக்காட்டாத
டைரிகள் ஏதேனும்
அவற்றை
ஒலிபரப்பு செய்யாமல்
ஒளித்து வைத்திருக்கலாம்.
இல்லையேல்,
மனசுக்குள் மட்டுமாவது
யாரேனும்
முனகிப் பார்த்திருக்கலாம்.
எனக்கே எனக்கான
என்
அனுபவக் கவிதைகள் கூட,
ஏதேனும்
கிராமத்துத் திண்ணைகள்
அனுபவித்து உரையாடியிருக்கலாம்.
எதுவும்
புதிதென்று என்னிடம்
எதுவுமே இல்லை.
எல்லாமே
நேற்றின் நீட்சிகள்,
இல்லையேல்
துண்டிக்கப்பட்ட
கடந்தகாலக் காற்றின்
இணைப்புகள் மட்டுமே.
Subscribe to:
Posts (Atom)