புரிதல்

நான் புரிந்து கொண்ட‌
முதல் கவிதை - அன்னை

புரிய முயன்ற‌
கவிதை - அப்பா

புரிய முயன்று தோற்றுப் போன‌
கவிதை - மனைவி

புரியாமலேயே போன‌
கவிதைகள் - மக்கள்

நான் மட்டும் என்ன ?
புரிந்தும் புரியாத புதிர்தானே !














====================================================================================

புரிந்த முதல்கவிதை பெற்றாள்; முயன்று
தெரிந்தவிடம் தந்தையே; தோற்றவிடம் இல்லாள்
புரியாமல் போன கவிதை புதல்வர்;
புரிந்தும் புரியாத நான்.

வெற்றியின் ரகசியம் என்ன?

வெற்றியின் ரகசியம் என்ன?

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர் (469 BC–399 BC)

அவர் வாழ்ந்த காலத்தில், ஒரு நாள், ஒரு இளைஞன் வந்து அவரை சந்தித்தான். வெற்றியின் ரகசியத்தைத் தனக்கு சுருக்கமாகச் சொல்லித்தருமாறு வேண்டிக்கொண்டான்.

அடுத்த நாள் காலை, ஊருக்கு அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு வந்து தன்னை சந்திக்கச் சொல்லி, அப்போதைக்கு அவனை அனுப்பிவைத்தார் அவர். அவனும் மறு பேச்சின்றி சென்று விட்டான்.

அடுத்த நாள் காலை. ஆற்றங்கரைக்கு வந்து அவரைச் சந்தித்தான் அவன்.

தன்னுடன் சேர்ந்து நடக்குமாறு அவனைப் பணித்துவிட்டு, அவர் ஆற்றுத் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவனும் நடந்தான்.

மார்பளவு நீருள்ள பகுதிக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

அப்போதுதான் அது நடந்தது.

சற்றும் எதிர்பார்க்காத வகையில், அந்த இளைஞனைத் தன் இருகரங்களாலும் பிடித்த சாக்ரடீஸ், தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தண்ணீருக்குள் அமுக்கிப் பிடித்துக் கொண்டார்.

ஒன்றும் புரியாத இளைஞன், அவர் பிடியில் இருந்தும், நீருக்குள் இருந்தும் விடுபட முயன்றான். முடியவில்லை.

ஒரு நிமிட மரணப் போராட்டத்திற்குப் பிறகு, தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். முகம் சிவந்துவிட்டது. மூச்சுத் திணறியதால், வேக வேகமாகக் காற்றை உள்ளிழுத்து சுவாசிக்கத் தொடங்கினான்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் தன்நிலைக்கு வந்தான்.

சாக்ரடீசின்மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்ததால், அமைதியாகக் கேட்டான்:

“ஐயா, ஏன் இப்படிச் செய்தீர்கள்?”

“செய்ததைவிடு! தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்போது உனக்கு மிக அத்யாவசியமாகத் தேவைப்பட்டது எது? - அதைச் சொல் முதலில்!” என்று பதிலுக்கு அவனைக் கேட்டார் சாக்ரடீஸ்.

“காற்று. சுவாசிப்பதற்கான காற்று!”

“வெற்றியின் ரகசியமும் அதுதான். மோசமான நிலையில் ஒன்று தேவைப்படும் நிலையில், போராடி, அதைப் பெற்றாய் இல்லையா நீ? வெற்றியும் அதுபோலத்தான் கிடைக்கும். வெற்றிக்கு வேறு ரகசியம்
ஒன்றும் இல்லை!

இணையக் காதல்…

இது
இருபதாம் நூற்றாண்டின் காதல்.
விரலாலும் குரலாலும்
விருப்பங்கள் பரிமாறிக் கொள்ளும்
விஞ்ஞானக் காதல்.

விழிபார்த்து வார்த்தைகளை
விழுங்கி விட்டேனென்று
கவிஞர்கள்
இனி பொய் சொல்லவேண்டாம்.

யாரும் பார்க்கக் கூடாதென்று
நெரிசல் நகரங்களில்
நிழல்ப்பூங்கா தேடவேண்டாம்.

மணிக்கணக்கில் அலங்காரம் செய்து
பிம்பங்களோடு பிடிவாதம் பிடித்து
கசங்காமல் நசுங்காமல்
நிழல் கூடக் கலையாமல்
நடக்கும்
அவஸ்த்தை இனி வேண்டாம்.

இந்த நேரம் பார்த்தா
இவன் இங்கே வரவேண்டுமென்று
பயத்தின் படபடப்பில்
இதயத்துடிப்பை இறக்குமதி செய்யவேண்டாம்.

தொடுதல்களால் பற்றிக்கொள்ளும்
தொட்டாச் சிணுங்கி இலைகளாய்
எத்தனை நாள் தான் காதலிப்பது ?

காக்கவைத்ததற்குக் காரணத்தை
எத்தனை நாள் தான்
பிரதி எடுப்பது.
புதிதாய் கொஞ்சம் பேசுவோமே…

உலக வலையில்
ஏதோ ஓட்டையாம்.

கணிப்பொறி என்னோடு
முரண்டு பிடிக்கிறது.

தொலைபேசி
நேற்றைக்கு மூர்ச்சையாகி விட்டது.

காதலில் பொய் சொல்வது விதியாகி விட்டது
அதை
புதிதாய் சொல்வதற்கு பழகிக் கொள்ளலாம்.

விழிகள் இரண்டும் மோதும் முன்
விரல்கள் விரலிடை தூங்கும் முன்..
தீண்டலின் தூண்டல் துவங்கும் முன்
இதயங்களிடையே
நம்பிக்கை பரிமாறுகிறதே விஞ்ஞானக் காதல் !!!

காதலுக்கு
சிணுங்கலின் வெப்பத்தை விட
நம்பிக்கையின் சப்தம் தானே
தேசிய கீதம் !!!

அன்று முதல் இன்று வறை என் காதல் தோற்றதில்லை

அன்று முதல் இன்று வறை என் காதல் தோற்றதில்லை


ஆணுக்கும் பெண்ணுக்கும்
உல்ல ஒறே ஒரு வித்தியாசம்
ஆணுக்கு மீசை இருக்கும்
பெண்ணுக்கு மீசை இருக்காது
இதுதான் எனக்கு தெரிந்த
ஒறே பாலியல் வேற்றுமை
அன்று ! சிறு வயதில்

அப்பொழுது வயது
எட்டு அல்லது ஒன்பது இருக்கும்
தொடக்க பள்ளியில்
ஒன்றல்ல இரண்டல்ல
ஐந்து காதலிகள் இருந்தார்கள்
அதில் ஒரு ஆசிரியையும் அடங்கும்
எல்லாம் ஒரு தலை காதல்தான்

அப்பொழுது
எனக்கு தெரிந்த ஒறே
ஆண் பெண் பாளியல் உறவு
ஆண் பெண்ணுக்கு முத்தம் தருவான்
பெண் கட்டிப் பிடிப்பாள்
எல்லம் படத்தில் படித்த பாடங்கள்

எப்பொழுது நினைத்தாளும் சிரிப்பு வரும்
சில நேரங்களில் வெற்கமும் தலை தூக்கும்

அடுத்தது இடைநிலைப் பள்ளி
அதை தொடர்ந்து கல்லூரி
நான் காதலித்த பெண்களின்
என்னிக்கையை கணக்கிட
கல்குலட்டர் ஒன்று தேவைப்படும்

தமிழ் படங்களில் வருவதுப் போல்
நின்றால் காதல் அமர்ந்தால் காதல்
படுத்தால் காதல் நடந்தால் காதல்

சிரித்தவள் முதல் முறைத்தவல் வரை
கூட படித்தவல் முதல்
நடக்கையில் இடித்தவள் வரை
அனைவர் மீதும் காதல்

எத்தனை முறை காதல்
கொண்டும் அதை வெளிப் படுத்தியதில்லை
அது என்ன உணர்வு என்று
இன்று வரை தெரியவில்லை

இன்று
திருமணமாகி மூன்று பிள்ளைகள்
பிறந்து விட்டனர்

ஆனால் பலய நினைவுகள் மட்டும்
என் மனதில் பசுமரத்து ஆணியாய்
பசுமை மாறாமல் அப்படியே
நிலைத்திருக்கிறது

பலய காதலை நினைத்து
இன்றும் சிரிக்கிறேன் ! தனிமையில்....
அதை கண்டு

பொங்கி வெடிக்கிறால் மனைவி
என்ன இளிப்பு வேண்டிகிடக்கு ?
எவளை நினைத்து சிரிக்கிறிங்க
வார்த்தை வெடிகள் வீசுகிறாள்

அப்பா எப்பவுமே இப்படித்தான்
பிள்ளைகள் பின்பாட்டு பாட
என் கடைக்குட்டி மட்டும்
மௌனமாய் சிரிக்கிறாள்

அவளுக்கு புரிகிறதோ என்னவோ
என் மனது
குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா

அன்று முதல் இன்று வறை
என் காதல் தோற்றதில்லை
நான் தானே காதலித்தேன்
நான் வாழும் வறை
என் காதலும் வாழும் அல்லவா ?

வாழ்க்கைப் பயணம்

வாழ்க்கைப் பயணம்

நெடுந்தூர பயணம்
தொடங்கிய இடம் நினைவில் இல்லை
முடியும் இடமும் தெரியவில்லை

இத்தனை வருட பயணத்தில்
இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே எனக்கு புரிய வில்லை

என்ன கொடுமை சார் இது
எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ?
ஒன்னும் தெரியாமலயே
பயணிக்கிறேன் ........

கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்
தொடங்கிய இடம் தெரியவில்லை

தடுக்கி விழுந்த இடம்
வழுக்கி விழுந்த இடம்
முட்டிக் கொண்ட இடம்
எல்லாம் தெரிகிறது......

எங்கே போகிறேன்
ஏன் போகிறேன்
என்றுதான் தெரியவில்லை......

வெறுமையின் பாரம்...

வெறுமையின் பாரம்...


இனி யாரும் என்னைத் தேடாதிருக்கட்டும்.
தடுத்துத் துகிலுரிக்க
கையொன்று என்னை தீண்டாதிருக்கவே
பாரங்கள் கையிலும் தலையிலுமாய்
எல்லை தொடும்
பறவையின் வேகத்தோடு புறப்படுகிறேன்.

வறுமை வயிறு காய்ந்தபோதும்
குழந்தைகள் நடுவில்
காமத்தால நிரப்பப்படுகின்றன என் இரவுகள்.
மனித உருவில் மிருகங்கள் வாழும்
குகையிலிருந்து செல்வது
வீண் விரயமாய் இல்லை எனக்கு.

பாரங்கள் தந்தவன்
வெறும் பொருளாய் பிண்டமாய்
நினைக்கையில்
தீப்பற்றி எரியும் நகரத்திலிருந்து
விடுபடும் புழுக்கள் பூச்சிகள் போல
இடம் நகர்ந்து
காடோ கடலோ தேடியே போகிறேன்.

ஐந்தறிவு மிருகங்களால்
ஆபத்து ஒன்றும் பெரிதாயிருக்காது.
மனதிலும் கையிலும் யாருக்கும் உதவாத
வெற்றுப் பாராங்கள் மட்டுமே
எடுத்துப் போகிறேன்.
விட்டுப் போவதும் அதுவேதான்.

இனியாவது உணரட்டும்
மனிதரா மிருங்களா நாங்கள் என்று.
இல்லை அப்படியே வாழட்டும்.
மறுத்து வாழாத ஒருத்தி
வரும்வரை !!!
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!



எனக்காகப் பிறந்தவள் நீயென்று
என்னைத் தந்தவளையும் தவிக்கவிட்டு
உனக்காக காத்திருந்து தவித்து நின்றேன்!!

உன் அன்பைப் பெறுவதற்காய் சில ஆண்டுகள்
உன்னருகே என் உலகம் சுற்றியது
காதலியாய் நீ கிடைத்தாய் தவமிருந்து!!

காத்திருந்து நீ கிடைத்ததால் அன்பானவளே உன்னோடு
காலமெல்லாம் வாழ்ந்திடவே எண்ணியிருந்தேன்
காரணமேதுமின்றி பிரித்தது போர் என்னும் அரக்கன்!!

காத்திருந்து பாத்திருந்தேன் பல ஆண்டுகள்
காணவில்லை நான் உன்னை இன்றுவரை காதலியே
பழகிய நாட்கள் எண்ணி காதல் விழுதாகிவிட்டதடி!!

உன்னோடு சேர்ந்திருந்தால் இன்றிருக்கும் காதல்
கிடைத்திருக்காது எப்பிறவியிலும் எனதன்பே
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

உன்னோடு சேர நான் எண்ணவில்லை காரணம்
நீ என்மனதில் வாழ்ந்திருப்பதால் என் அன்பே
நீ தந்த காதல் ஒன்றே போதும் ஏழுஜென்மத்துக்கும்!!

இந்த காதலர் தினத்தில் உனை எண்ணியே
வரைந்தேன் கவிதை உனக்கு எழுதிய மடலாய்
கண்டிப்பாய் நீ படிப்பாய் நான் எழுதியது என்று தெரியாமலே!!

உன்னை சந்திக்கும் நாள்வரை...!

உன்னை சந்திக்கும் நாள்வரை...!




காதல் நீ இன்று தூரம்
நான் இந்த நேரம்
நிலவொடு நள் இரவொடு
தூது விட்டேன் தென்றலை
தென்றலும் தீண்டாத
தென் மதுரை சீமையாளே
தெவிட்டாத தேன் தமிழில்
நீ பேசியது என் செவியோரம்
ரீங்காரம் பாடுது
தூய மனம் கொண்டவளே
தூய காதலியே
உன் இதழ் தந்த இனிப்பாலே
என் மனம் கொண்ட மகிழ்வாலே
வரைந்தேன் இம்மடலை
நள் இரவினிலே
நான் கண்காணா தேசம்
சென்றாலும் என் கண்முண்ணே
தோன்றும் பெண்ணே
என்னைக்காணாமல்
ஒரு சுற்று இளைத்து விட்டாயோ?
இளையவளே என் இதயத்தை
பகிர்ந்து கொண்டவளே
பேனாவை வெண்தாளில் பதித்தால்
தெரியவில்லையடி எழுத்துக்கள்
தெரிகிறதடி உன் சிரிப்பொலியின் ­முத்துக்கள்
என்று வரும் உன்னை சந்திக்கும் நாள்
அன்றுவரை சந்திக்கும் இந்த தாள்

உன்னை சந்திக்கும் நாள்வரை...!

உன்னை சந்திக்கும் நாள்வரை...!




காதல் நீ இன்று தூரம்
நான் இந்த நேரம்
நிலவொடு நள் இரவொடு
தூது விட்டேன் தென்றலை
தென்றலும் தீண்டாத
தென் மதுரை சீமையாளே
தெவிட்டாத தேன் தமிழில்
நீ பேசியது என் செவியோரம்
ரீங்காரம் பாடுது
தூய மனம் கொண்டவளே
தூய காதலியே
உன் இதழ் தந்த இனிப்பாலே
என் மனம் கொண்ட மகிழ்வாலே
வரைந்தேன் இம்மடலை
நள் இரவினிலே
நான் கண்காணா தேசம்
சென்றாலும் என் கண்முண்ணே
தோன்றும் பெண்ணே
என்னைக்காணாமல்
ஒரு சுற்று இளைத்து விட்டாயோ?
இளையவளே என் இதயத்தை
பகிர்ந்து கொண்டவளே
பேனாவை வெண்தாளில் பதித்தால்
தெரியவில்லையடி எழுத்துக்கள்
தெரிகிறதடி உன் சிரிப்பொலியின் ­முத்துக்கள்
என்று வரும் உன்னை சந்திக்கும் நாள்
அன்றுவரை சந்திக்கும் இந்த தாள்

மனிதா நீ மாறவேண்டும்.....!

மனிதா நீ மாறவேண்டும்.....!


பிறப்பிற்கும் இறப்பிற்குமான
இடைவெளி வாழ்க்கை-அந்த
நீரோட்ட நீட்சிக்குள்
இன்பம்,துன்பம்.........
உயர்வு,தாழ்வு.....
மாறி மாறி நகர்கிறது-மனித
வாழ்க்கைப் பயணம்

மனிதர்கள் பலவிதம்-அவர்
வாழ்க்கை ஒருவிதம்-அதில்
காணும் மாற்றங்கள்
ஏராளமே............

தீயவன் நல்லவனாகலாம்
நல்லவன் கெட்டவனாகலாம்
ஏழைகள் செல்வந்தராகலாம்
அறிவற்றவர் அறிவாளியாகலாம்
அறிவாளி அறிவற்றவராகலாம்

அழகற்றவர் அழகானவராகலாம்
அழகானவர் அழகற்றவராகலாம்
முரடன் பதுமையானவனாகலாம்
மென்மையானவன் முரடனாகலாம்

இப்படியே ...........
மாற்றங்கள் வந்து போகலாம்
மாரியும் கோடையும்
மாறி வரினும் சூரியன் தேய்வதில்லை
ஆனால்..............!
அன்பு வைத்தவர்
அன்பற்று நடக்கையிலே
கல்மனமெனிலும் கசியத்தான் செய்யும்
பாசம் என்பது வேசம் அல்ல
அன்பு என்பது கேட்டுப் பெறுவது அல்ல
பணமோ,பொருளோ கொடுத்தால்
அங்கேதான் அன்புஇருப்பது என்றில்லை.....

இயல்பாக எழும் மனித உணர்வுக்குள்
ஊற்றெடுப்பதே அன்பு.......
அன்பு இருந்தால் வெறுப்பு எதற்கு...???
மனிதர்களே ........
புதியன புகுதலும் பழையன கழிதலும்-இவை
அன்பிற்கு அர்த்தம் அற்றது
அன்புகொண்டவரை கலங்கவைக்காதே
மனிதா மாற்றிடு......

நாட்குறிப்பேடு

நாட்குறிப்பேடு


நாள் தோறும்
நான் எழுதும்
நாட்குறிப்பேட்டில்
உன் முகவரி கண்டே
எழுதுகின்றேன்.

ஒவ்வொறு ஆண்டின்
என் நாட்குறிப்பேட்டில்
உன் பெயரே
முதலெலுத்து.

உன் நினைவலைகள்
வீசும் நாட்குறிப்பேட்டில்
என் கவிதைகளும்
வலம் வருகின்றது.

உன் நினைவுகள் அறியாத
நாட்குறிப்பேட்டை
இதுவரை நான் எழுதியதுமில்லை
இனியும் நான் எழுதப்போவதுமில்லை.

நிறுத்தி விடு..

நிறுத்தி விடு.


சூனியமாக இருந்த என் பாடலில்
சுருதி சேர்க்கப்பட்டது உன்னால் தான்
வெறுமனே வேதனைகளை
இசைத்துக் கொண்டிருந்த நான்
உன் வருகையால்
காதல் கானங்களை இசைக்கிறேன்...

வந்து போகும் என் காதலில்
உன்னிடம் ஒரு விண்ணப்பம்...

உன் மடி உறங்க ஒரு சந்தர்பம்
நிரந்தரமற்ற என் நின்மதிகளில்
நீயாவது நிரந்தரமாக தங்கிவிடு...

உனது வருகையும் உறுதியற்றது என்றால்
உன் மடி உறக்கத்தின் போது
எனது இறுதி மூச்சை உதிர்த்து
விடுகிறேன்...
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!


எனக்காகப் பிறந்தவள் நீயென்று
என்னைத் தந்தவளையும் தவிக்கவிட்டு
உனக்காக காத்திருந்து தவித்து நின்றேன்!!



உன் நினைவருகில்...!


விண்ணைத் தாண்டிப்
போகுது.....என் எண்ணம்.
என்னைத் தாண்டிப்
போனது....வந்த துன்பம்.




உன்னை சந்திக்கும் நாள்வரை...!


காதல் நீ இன்று தூரம்
நான் இந்த நேரம்
நிலவொடு நள் இரவொடு
தூது விட்டேன் தென்றலை



மனிதா நீ மாறவேண்டும்.....!


பிறப்பிற்கும் இறப்பிற்குமான
இடைவெளி வாழ்க்கை-அந்த
நீரோட்ட நீட்சிக்குள்
இன்பம்,துன்பம்.........
உயர்வு,தாழ்வு.....
மாறி மாறி நகர்கிறது-மனித
வாழ்க்கைப் பயணம்



ஈரம் காயவில்லை


தாய் நிலத்தில்
சேய்கள் இழந்த
அவலம் தீரவில்லை.
ஓலம் ஓயவில்லை.



நாட்குறிப்பேடு


நாள் தோறும்
நான் எழுதும்
நாட்குறிப்பேட்டில்
உன் முகவரி கண்டே
எழுதுகின்றேன்.



பொங்கியெழுவோம்………


பொங்கியெழு தமிழா-நீயொரு
மங்காப்புகழ் கொண்ட மானமறவன்.
தங்கி நிற்கும் தாடகர்; நம் மண்ணை விட்டு
தாண்டி ஓடட்டும்.


சாதனை


வயது தடையல்ல
எந்த வயதிலும் புரியலாம்
சாதனை


மாற்றம் வேண்டும்


ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும்
இன்னல்கள் யாவும் தீர்ந்திட வேண்டும்



கல்லறைக்குள் கண்மணிகள்


இறையாண்மை மிக்க இலங்கையென
இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாந்து கிடப்பாய் தமிழா
துயிலும் இல்லங்களும்
உழுது அழிக்கப்படுகிறது இங்கே



விழிகளில்...பாதை அமைத்தேன்.


என் விழிகளில்...
பாதை அமைத்தேன்
உன் வருகைக்காக.
இமைகள் மூடிக்...
காத்திருந்தேன்
உன் அன்புக்காக.



புதிய கிளிநொச்சி


அழகு தேசமே
எழில் கொஞ்சும் பேரழகே-உன்
இறக்கை ஒடிந்து
இயற்கை வற்றி
இடிந்து போனதேனோ



வாழ்க்கைப் பயணம்


மனித வாழ்வதோ மாயங்கள் நிறைந்தவை-நீ
மனிதனாய் வாழ்ந்தால் அவை நியாயங்கள் நிறைந்தவை
நிறைவுடன் வாழ்ந்து நீத்தவர் உண்டோ?
கவலைகள் துறந்து கடந்தவர் உண்டோ


தமிழனாய் தலை நிமிர்வோம்.


தன்மானம் தமிழ்மானம் உள்ளவனாய்
தரணியிலே தலைநிமிர்ந்து வாழ்பவனாய்
அன்னையவள் கண்ணீர் துடைப்பவனாய்
அவள்வாழ அரசொன்று அமைப்பவனாய்
மண்ணினிலே எவன்வாழ்வான்? அவனே தமிழன்.


மண்ணிலே மாதவன்


வங்கத்தின் நீழ் அலை தாலாட்டும்
எம தீழ ஏகாந்த புரியே
எம்மின விடிவு என்று தணியுமோ
என்றுதானே இமை மூடாமல்
விழித்திருக்கின்றாய் நீயும்



செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!


மன்னித்துக்கொள்...காதலா!!!
இடியின் மழையா காதலா..?
விட்டுவிடு உன் கோவமதை..!
வேண்டாம் என்மேல் அன்பே!



பண்பாக்கு உன் உளத்தை.....!


நக்கல் நையாண்டி நளினம் கொட்டி
உக்கல் ஆக்கி உளுக்கப் பண்ணி
குனியப் பண்ணி குட்டிச் சுவராக்கி
தனியப் போக வைப்பர் அவனை.



வெல்லத் தமிழினி தாகும்


தமிழே ஆதித் தாயே நீயே
தமிழர் போற்றும் சேயே, மாதா
புலவர்க ளெல்லாம் புசித்தே மகிழும்
புலமை மிகுந்த தருவின் கனியே



நிறுத்தி விடு...


சூனியமாக இருந்த என் பாடலில்
சுருதி சேர்க்கப்பட்டது உன்னால் தான்
வெறுமனே வேதனைகளை
இசைத்துக் கொண்டிருந்த நான்
உன் வருகையால்
காதல் கானங்களை இசைக்கிறேன்...



மானிடா


புத்தி கெட்ட மானிடா
இந்த மானிட பிறப்பே
ஓர் ஜென்மம் தானே தெரிந்தும்
உனக்கு தலைக்கனம் ஏன்


உன்னைப் பார்க்க என்விழகள் ஏங்குதே


மின்னல் மின்னியதே
என் கண்களை அது தாண்டியதே
உன் முகத்தை நான் கண்டபோது
என் உணர்வுகளை அது தீண்டியதே



முற்றத்தில்


பாரில் எமது பைந்தமிழ்
வாழ்ந்த சரிதம் தெரியுமா ?
இன்று பகைவர் பிடியில்
வாடி வதங்கும் சங்கதி தெரியுமா ?



அவள் அவன்


கரத்தில் முத்தம்மிட்டாள் அவள் மறுவினாடி
கன்னத்தில் முத்தமிட்டான் அவன் அவளை நாடி
சில நொடிகளில் நடந்த பரிமாற்றம்
ஜென்மத்திற்கும் நினைவிருக்கும் ரசாயணமாற்றம்



கவி


கவிதை கற்பனை குதிரை
ஓட்டுபவர் மனங்களில்
பிறக்கும் வேகம்
சிந்தனைக்கு விருந்து
சிறகடிக்கும் பருந்து



நீயில்லா இரவு


அன்று
உன் ஈரக் கனவுகளுடன்
இரவு கழியும்
காலையில் உன் முகம்
காணும் ஆவலில்
பொழுது விடியும்.