வார்த்தை தவறிவிட்டாய்...

வார்த்தை தவறிவிட்டாய்...


இதுதான் உலகமென
புரிந்த வயதிலிருந்து
நீ தான் வாழ்க்கையென
வாழ்ந்திருந்தேன்..


அழகும் நீதான்,
எனக்கு தெரிந்த ஒரே
அழகியும் நீதான் என
கவிதைகள் எழுதி வந்தேன்..


ஆசை குழந்தைகளோடு
அன்பாய் வாழ்வதாய்
நிதம் ஒரு சொப்பனம்
கண்டு வந்தேன்..


காலமெல்லாம் உன்னை
கைப்பிடிப்பேன் என்றெண்ணி
கண்ணும் கருத்துமாய்
காதலை வளர்த்தேன்..


கனவு கை கூடுமென
நினைத்திருக்கையில்
கல்யாண மாலையோடு நிற்கிறாய்
மாற்றானோடு..


இது தான் விதியென
ஏற்றுக்கொள்ளலாம்..
இன்னார்க்கு இன்னார் என
எழுதியிருப்பதாய் தேற்றிக் கொள்ளலாம்..


ஆனால்
அம்மாவை கேட்டு அழும்
நம் கனவு குழந்தைகளுக்கு இனி
என்ன பதில் சொல்வேன் ..

No comments:

Post a Comment