வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்
கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே
கனவாகியது எனக்கு....
வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி..
எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால்
பொன்னகையில் பார்ப்பதை விட
புன்னகையில் பார்ப்பது என்னை
பகல் நேர பௌர்ணமிகளாய்
தோன்றியது சிலருக்கு ....
எனை நோக்கி அனுதாபம்
அடைந்த சில நட்புகளை
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்
காயம் கண்ட இதயமதை மீண்டும்
காயப்படுத்திய உறவுகளை இன்னும்
ஏற்கவில்லை என் மனம் ஏனோ?
காலங்களும் கரைந்து சென்றது
காட்சிகளும் மாறியது
கனவுகள் போல
கண்கள் கண்ட கனவுகளும்
கலைந்து சென்றது
கார்மேகம் போல...
மனதில் எழுந்த கேள்விகளுக்கு
விடை தேடுகின்றேன்
நான் நாளும்..
மனித மனங்களும் மரித்து விட்டது
இறைவனோ மௌனம் காக்கின்றான்
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....
பேதை இவள் பேதலிக்கின்றாள்
வரும் கால வாழ்வை எண்ணி
யாரறிவார் இவள் மனதை.......
அழுவதை நிறுத்துங்கள்
அழுவதை நிறுத்துங்கள்-இதை
உள்ளத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
அழிவான் அழிவான் பகைவன்-அவன்
தமிழன் வாழ்வை அழிக்க நினைத்தால்.
அழிவான் அழிவான் பகைவன்.
நிமிர்வான் நிமிர்வான் தமிழன்-இவன்
பிரபாகரனின் வழியில் நிமிர்வான்.
புலிகள் நாங்கள் வெல்வோம்
உங்கள் விழிகளின் ஈரம்துடைப்போம்.
இது பிரபாகரன் காலம்
தமிழன் தலை நிமிர்வின் நேரம்.
இருளாய் இருக்கும் தமிழீழம்
தமிழன் மானப் போரின் தாய்ஈழம்.
இருளாய் இருக்கும் தமிழன் வாழ்வும்
நாளை விடியும் எங்கள் தமிழீழம்.
வாறான் வாறான் பகைவன்-அவன்
தமிழ் ஈழ மண்ணை ஆழ்வானா?
போறான் போறான் புலிவீரன்
தமிழீழம் மீட்கப் போராட.
ஈழம் ஈழம் தமிழீழம்-எங்கள்
தலைவன் காலத்தில் கிடைக்கும்.
சிங்கள ஈனர் படையணி அழியும்
இது வன்னி மண்ணில் நடக்கும்.
சிங்கள மூடர்கள் கொட்டம் அடங்கும்
தமிழன் மானப்போரில் பகைவன்
உடல்ல்கள் சிதறும்.
இது வன்னிமண்ணில் நிச்சயம் நடக்கும்.
சிங்களம் நிச்சயம்-தன்
சிதறிய உடல்களை சுமந்து
துட்டகைமுனு முன் குவிக்கும்-இது
வன்னிமண்ணில் நிச்சயம் நடக்கும்.
உள்ளத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
அழிவான் அழிவான் பகைவன்-அவன்
தமிழன் வாழ்வை அழிக்க நினைத்தால்.
அழிவான் அழிவான் பகைவன்.
நிமிர்வான் நிமிர்வான் தமிழன்-இவன்
பிரபாகரனின் வழியில் நிமிர்வான்.
புலிகள் நாங்கள் வெல்வோம்
உங்கள் விழிகளின் ஈரம்துடைப்போம்.
இது பிரபாகரன் காலம்
தமிழன் தலை நிமிர்வின் நேரம்.
இருளாய் இருக்கும் தமிழீழம்
தமிழன் மானப் போரின் தாய்ஈழம்.
இருளாய் இருக்கும் தமிழன் வாழ்வும்
நாளை விடியும் எங்கள் தமிழீழம்.
வாறான் வாறான் பகைவன்-அவன்
தமிழ் ஈழ மண்ணை ஆழ்வானா?
போறான் போறான் புலிவீரன்
தமிழீழம் மீட்கப் போராட.
ஈழம் ஈழம் தமிழீழம்-எங்கள்
தலைவன் காலத்தில் கிடைக்கும்.
சிங்கள ஈனர் படையணி அழியும்
இது வன்னி மண்ணில் நடக்கும்.
சிங்கள மூடர்கள் கொட்டம் அடங்கும்
தமிழன் மானப்போரில் பகைவன்
உடல்ல்கள் சிதறும்.
இது வன்னிமண்ணில் நிச்சயம் நடக்கும்.
சிங்களம் நிச்சயம்-தன்
சிதறிய உடல்களை சுமந்து
துட்டகைமுனு முன் குவிக்கும்-இது
வன்னிமண்ணில் நிச்சயம் நடக்கும்.
நோட்டு மாலைகள்
பசித்துப்
பாலுக்கு அழுதபடியே இருக்கும்
பாவஜீவனாய்
எங்கோ ஒரு கைக்குழந்தை
மருந்துக்கு வழியின்றி
ஏதோவொரு வீட்டின் மூலையில்
விடாமல் இருமிக் கொண்டிருக்கும்
முதிய தாய்
உடைந்துபோன மூக்குக் கண்ணாடியின்
சட்டத்தைத் தினம்தினம்
தொட்டுப் பார்த்து
மகனிடம் புதுசுக்கு
மனுப்போட்டுக் காத்திருக்கும்
வயோதிகர்
அஸ்தமனம்வரை உழைத்து
அரைவயிற்றுக் கஞ்சிக்காவது
ஆகுமென ஆசையாய்
உலைவைக்க வந்தவளிடம்
உதைத்துப் பிடுங்கிக்கொண்டவன்
பெயர்தான் வாழ்க்கைத்துணையாம்
நொந்து சுருண்டவளாய்
மனைவியெனும் ஒரு பிறவி
'பரீட்சைக்குப் பணம் கட்டினாதான்
பள்ளிக்கூடம் போவேன்'
சொன்னாதாலே அடிவாங்கி
கன்னம்வீங்கிக் கலங்கிநிற்கும்
சின்னஞ்சிறு பாலகன்
'இந்த ஒரு வருசமாவது
பொறந்த நாளைக்கி
புதுசு வாங்கித் தாப்பா'
கிழிந்த பாவாடையில்
வழிந்த கண்ணீரைத்
துடைத்துக் கொள்ளும்
பதின்ம வயது மகள்
ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.
பாலுக்கு அழுதபடியே இருக்கும்
பாவஜீவனாய்
எங்கோ ஒரு கைக்குழந்தை
மருந்துக்கு வழியின்றி
ஏதோவொரு வீட்டின் மூலையில்
விடாமல் இருமிக் கொண்டிருக்கும்
முதிய தாய்
உடைந்துபோன மூக்குக் கண்ணாடியின்
சட்டத்தைத் தினம்தினம்
தொட்டுப் பார்த்து
மகனிடம் புதுசுக்கு
மனுப்போட்டுக் காத்திருக்கும்
வயோதிகர்
அஸ்தமனம்வரை உழைத்து
அரைவயிற்றுக் கஞ்சிக்காவது
ஆகுமென ஆசையாய்
உலைவைக்க வந்தவளிடம்
உதைத்துப் பிடுங்கிக்கொண்டவன்
பெயர்தான் வாழ்க்கைத்துணையாம்
நொந்து சுருண்டவளாய்
மனைவியெனும் ஒரு பிறவி
'பரீட்சைக்குப் பணம் கட்டினாதான்
பள்ளிக்கூடம் போவேன்'
சொன்னாதாலே அடிவாங்கி
கன்னம்வீங்கிக் கலங்கிநிற்கும்
சின்னஞ்சிறு பாலகன்
'இந்த ஒரு வருசமாவது
பொறந்த நாளைக்கி
புதுசு வாங்கித் தாப்பா'
கிழிந்த பாவாடையில்
வழிந்த கண்ணீரைத்
துடைத்துக் கொள்ளும்
பதின்ம வயது மகள்
ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.
சாயம்போன தபால்பெட்டி...
ப்ரியமானவள்
கிழித்துப் போட்ட
காதல் விண்ணப்பத்திற்கு
நடுவில் நிற்கும்
ஒருதலைக் காதலனை
நினைவுபடுத்துகிறது
குப்பைகள் சூழ நிற்கும்
சாயம்போன
தபால் பெட்டிகள்
*********************************
தபால்நிலையங்கள்
குறித்த
புகார்களையும்
ஆலோசனைகளையும்
அனுப்ப வேண்டிய முகவரி:
compliance@postoffice.com
********************************
வெஸ்டர்ன் யூனியன்
மணி ட்ரான்ஸ்ஃபர்கள்
பதினாறு இலக்க
எண்ணுடன்
மூன்றிலக்க
ரகசிய எண் கேட்கும்
கடன் அட்டை
பரிவர்த்தனைகள்
அலைபேசி
எண் அழுத்தலில்
கண்டம் தாண்டிப்
பயணிக்கும்
பணங்கள்
இன்னும்.. இன்னும்...
எத்தனையிருப்பினும்
இன்றும்
ஒவ்வொரு கிராமத்திலும்
ஒரு தாயாவது
காத்திருக்கிறாள்
மகனின்
மணியார்டருக்காக.
***************************************************
இப்போதெல்லாம்
எனக்கு
கடிதங்கள்
ஏதும் வருவதில்லை
என்ற வருத்தத்தைச் சொன்னேன்.
எங்களுக்கும்தான்
என்கிறார்
போஸ்ட் மாஸ்டர்.
கிழித்துப் போட்ட
காதல் விண்ணப்பத்திற்கு
நடுவில் நிற்கும்
ஒருதலைக் காதலனை
நினைவுபடுத்துகிறது
குப்பைகள் சூழ நிற்கும்
சாயம்போன
தபால் பெட்டிகள்
*********************************
தபால்நிலையங்கள்
குறித்த
புகார்களையும்
ஆலோசனைகளையும்
அனுப்ப வேண்டிய முகவரி:
compliance@postoffice.com
********************************
வெஸ்டர்ன் யூனியன்
மணி ட்ரான்ஸ்ஃபர்கள்
பதினாறு இலக்க
எண்ணுடன்
மூன்றிலக்க
ரகசிய எண் கேட்கும்
கடன் அட்டை
பரிவர்த்தனைகள்
அலைபேசி
எண் அழுத்தலில்
கண்டம் தாண்டிப்
பயணிக்கும்
பணங்கள்
இன்னும்.. இன்னும்...
எத்தனையிருப்பினும்
இன்றும்
ஒவ்வொரு கிராமத்திலும்
ஒரு தாயாவது
காத்திருக்கிறாள்
மகனின்
மணியார்டருக்காக.
***************************************************
இப்போதெல்லாம்
எனக்கு
கடிதங்கள்
ஏதும் வருவதில்லை
என்ற வருத்தத்தைச் சொன்னேன்.
எங்களுக்கும்தான்
என்கிறார்
போஸ்ட் மாஸ்டர்.
Subscribe to:
Posts (Atom)